சமூகத்தில் இணைக்கப்பட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் தம்மை பாரபட்சமாக நடத்த வேண்டாம் என புனர்வாழ்வளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னும் தாம் சந்தேகக் கண்ணோட் டத்திலே பார்க்கப்படுவதாகவும் இராணுவத்தினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
தாம் தொழில்களுக்குப் புறப்பட்டு சென்ற பின்னர் தமது வீடுகளுக்கு இராணுவம், வருகை தந்து சந்தேகக் கண்ணோட்டத்தோடு கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.
Social Buttons