Latest News

March 30, 2015

வடக்கு முதல்வருக்கு ஆப்பு வைக்க தயாராகும் கூட்டமைப்பு-அழிவடையுமா கூட்டமைப்பு
by admin - 0

சிங்கள அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் 
ரணிலுடன் முரண்பட்ட வடக்கு முதல்வரை வீட்டுக்கு  அனுப்ப தீர்மானம் மேற்கொள்ளவதாக தகவல் தெரிவிக்கின்றது இதை உறுதிப்படுத்துவது போல் மாவையின் கருத்தும் தற்பொழுது வெளிப்பட்டுள்ளது 
www.vivasaayi.com
மாவை

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன்  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார். இதனை அனுமதிக்கமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார். ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் நீக்கப்பட்டுள்ளமையினை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

பதிவு இணைய செய்தி 
கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக்கட்சி பின்னடித்துவருகின்ற நிலையில் ஏனைய கட்சிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினை கட்சிகளின் கூட்டாக முதலில் பதிவு செய்ய முற்பட்டுள்ளன.
lankasri,jaffna
vivasaayi
« PREV
NEXT »