Latest News

February 22, 2015

யாழ் பல்கலை கழக மாணவர்களின் கைகளை பலபடுத்த இளைஞர்களே ஒன்றிணையுங்கள்
by admin - 0

யாழ் பல்கலை கழக மாணவர்களின் கைகளை பலபடுத்த இளைஞர்களே ஒன்றிணையுங்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ் மாவட்ட தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:-

எதிர்வரும் 24ம்திகதி செவ்வாய்கிழமை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் இணைந்து ஜெனீவா பிரேரணை பிற்போடப்பட்டத்தை கண்டித்தும் குறிப்பிட்ட திகதியில் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேற்கொள்ள இருக்கும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்பெற செய்ய இளைஞர்களே ஒன்று இணையுங்கள்.

எமது தமிழ் மக்களின் குறிகாட்டியாக யாழ் பல்கலை கழக சமூகம் இருகின்றது இவர்கள் காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளபட்டு வந்த அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்கள். உண்மையில் இன்று சர்வதேசம் எங்களை திரும்பி பார்கின்றார்கள் என்றால் அது பல்கலை கழக மாணவர்களால் மேற்கொள்ளபட்ட மிக பிரமாண்டமான பொங்கு தமிழ் நிகழ்வின் மூலமே என்பதை எவரும் மறந்து விட முடியாது. ஆனால் ஆயுத போராட்டம் மௌனித்த பின்னர் பல்கலை கழக சமூகம் பல்வேறு வகையில் அடக்கி ஒடுக்கப்பட்டர்கள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டர்கள் இதனால் மாணவ சமுதாயம் தமது இன உணர்வுகளை அடக்கி வாழ்ந்து வந்தார்கள் சர்வதேசம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வினை தருவார்கள் என்று எதிர் பார்த்தார்கள் ஆனால் இன்று சர்வதேசமும் பின்னடிகின்ற நிலையில் மீண்டும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளார்கள்.

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணி ஒன்றை செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பல்கலை கழக வளாகத்தில் இருந்து நல்லூர் வரை நடாத்த திட்டமிட்டுள்ளார்கள் எனவே பல்கலைகழக மாணவர்களின் கைகளை பலப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம் என்றுள்ளது.

« PREV
NEXT »

No comments