Latest News

February 27, 2015

பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட சுதந்­தி­ரக்­கட்சி பிள­வு­படும் நிலையில்
by admin - 0

சர்­வ­மத தலை­வர்­களை இணைத்து கொண்டு அமரர் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீல.சு.கட்சி விரைவில் பிள­வு­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது என பெருந்­தோட்­டத்­துறை அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார்.
அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்கு கண்டி செங்­க­ட­கல தொகு­தியில் அளிக்­கப்­பட்ட வர­வேற்பு வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை உரு­வாக்­கி­ய­போது சர்­வ­மத தலை­வர்­களின் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்று அவர்­களை இணைத்து கொண்டே ஸ்தாபித்தார். அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் அனைத்து இன மக்­க­ளையும் நேசித்தார். அதே போன்று சகல இன மக்­க­ளுக்கும் சம­மான சேவை­களை வழங்­கினார். அதனால் அன்று முஸ்லிம் மக்கள் பெரும் ஆத­ரவை வழங்­கி­னார்கள்.
மஹிந்த ஆட்­சியில் தமிழ், முஸ்லிம் கிறிஸ்­தவ மக்கள் மீது இன பாகு­பாடு காட்­டப்­பட்­டது. பள்­ளி­வா­சல்கள், ஆல­யங்கள், தேவா­ல­யங்கள் தாக்­கப்­பட்­டன.
இவ்­வா­றான செயல்­பா­டு­க­ளினால் ஸ்ரீ.ல.சு கட்சி இன வாத கட்­சி­ யாக மாறி­யுள்­ளது. இதன் கார­ண­மா­கவே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரான மைத்­திரி பால சிறி­சே­ன­விற்கு சிறு­பான்மை மக்கள் பெரும் ஆதா­ரவை வழங்கி அவரை ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற செய்­தனர்.
மஹிந்­தவின் இன­வாத ஆட்­சியால் ஸ்ரீல ங்கா சுதந்­தி­ரக்­கட்சி இன­வாதக் கட்­சி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. சிறு­பான்மை மக்கள் அக்­கட்சி மீது வெறுப்­புக்­கொண்­டுள்­ளனர்.
தற்­போது அக்­கட்­சியும் பிள­வு­படும் நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளது.எனவே நடை­பெ­ற­வுள்ள பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதற்கு கண்டி மாவ ட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள் அனைத்து இன மக்களையும் இணைத்து கொண்டு செயற் பட வேண்டும் என்றார்.
« PREV
NEXT »