சர்வமத தலைவர்களை இணைத்து கொண்டு அமரர் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீல.சு.கட்சி விரைவில் பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவுக்கு கண்டி செங்கடகல தொகுதியில் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியபோது சர்வமத தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்று அவர்களை இணைத்து கொண்டே ஸ்தாபித்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து இன மக்களையும் நேசித்தார். அதே போன்று சகல இன மக்களுக்கும் சமமான சேவைகளை வழங்கினார். அதனால் அன்று முஸ்லிம் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள்.
மஹிந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் மீது இன பாகுபாடு காட்டப்பட்டது. பள்ளிவாசல்கள், ஆலயங்கள், தேவாலயங்கள் தாக்கப்பட்டன.
இவ்வாறான செயல்பாடுகளினால் ஸ்ரீ.ல.சு கட்சி இன வாத கட்சி யாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்திரி பால சிறிசேனவிற்கு சிறுபான்மை மக்கள் பெரும் ஆதாரவை வழங்கி அவரை ஜனாதிபதியாக வெற்றி பெற செய்தனர்.
மஹிந்தவின் இனவாத ஆட்சியால் ஸ்ரீல ங்கா சுதந்திரக்கட்சி இனவாதக் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிறுபான்மை மக்கள் அக்கட்சி மீது வெறுப்புக்கொண்டுள்ளனர்.
தற்போது அக்கட்சியும் பிளவுபடும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.எனவே நடைபெறவுள்ள பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதற்கு கண்டி மாவ ட்ட ஐ.தே.க ஆதரவாளர்கள் அனைத்து இன மக்களையும் இணைத்து கொண்டு செயற் பட வேண்டும் என்றார்.
Social Buttons