Latest News

December 15, 2014

புலனாய்வாளர்கள் எனக் கூறி யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!
by Unknown - 0

படைப் புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திய வங்கி முகாமையாளர் ஒருவரின் தலமையிலான குழுவினர் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மீது தாக்குதல் சடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் 2ம் வருடம் கற்கும் மாணவன் ஒருவனுக்கு நேற்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுத்த நபர்கள் சிலர், பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வருமாறு அழைத்துள்ளனர்.
அங்கு வருகை தந்த மாணவன் மீது தாம் ஊரெழு படைமுகாமில் பணியாற்றும் புலனாய்வாளர்கள் என கூறியபடியே தாக்குதல் நடத்தியதுடன், நிலத்தில் முழங்காலில் உட்கார வைத்த அவர்கள் மாணவனிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக 3ம் வருடம் கற்கும் மற்றொரு மாணவனுக்கு தொலைபேசி அi ழப்பை எடுத்து உன் நண்பரை பிடித்து வைத்திருக்கிறோம்.
நாங்கள் புலனாய்வாளர்கள் உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வா என அழைத்துள்ளனர். அந்த மாணவனும் அங்கே தனது நண்பர்களுடன் வந்துள்ளான். அவர்களையும் அச்சுறுத்தி அவர்களின் அடையாள அட்டைகளையும் பரிசோதித்துள்ளதுடன், அவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் புலனாய்வளர்கள் என அடையாளப்படுத்தியவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல்யமான வர்த்தக வங்கி ஒன்றின் முகாமையாளர் என தெரியவந்துள்ளது.
அதனை மாணவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்கும் நிலையில் குறித்த முகாமையாளர் நாளை கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.
« PREV
NEXT »