Latest News

December 20, 2014

காணாமல்போன இளைஞனின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு
by Unknown - 0

சண்டிலிப்பாய் பகுதியில் பற்றைக்குள் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இன்று மானிப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களாக காணாமற்போன மானிப்பாய் கட்டுடையை சேர்ந்த ஐ.ஐ.வைத்தியவர்மன் (வயது 23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் எரிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.
« PREV
NEXT »