Latest News

October 28, 2014

வந்த கண்ணீர் நிஜமா...? இல்லை, இதுவும் நடிப்பு தானா?இளையதளபதி ரசிகர்களே
by admin - 0



இளையதளபதியின் "கத்தி" படம் ஒருவாறு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் வந்ததும் தான் வந்தது. ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விஜய்யின் கண்களிலும் கூட கண்ணீரை சேர்த்து கொண்டு வந்திருக்கிறது.

வந்த கண்ணீர் நிஜமா...? இல்லை, இதுவும்  நடிப்பு தானா..? என பலரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறதாம். இளையதளபதி ரசிகர்களே....! எதுவாக இருக்குமென நீங்களே வாசித்து முடிவு செய்யுங்கள்....

 தமிழர்கள் வாழும் உலகநாடுகள் அனைத்திலும் கத்தி திரைப்படம் தீபாவளி தினத்தன்று ஒரேநாளில் வெளியாகியது. அதேபோல இந்தியாவில் பிறமொழி மாநிலங்களிலும்,குறிப்பாக கேரளாவில் பெருமெடுப்பிலான விளம்பரங்களுடன் இந்தப்படம் வெளியானது.

 கேரளாவில் கத்தி படம் வெளியான திரையரங்கு ஒன்றிற்கு இந்தப்படத்தை முதலாவதாக பார்ப்பதற்காக, விஜய்யின் வெறிபிடித்த தீவிர ரசிகனான கேரளா-பாலக்காடு உன்னிகிருஸ்ணன் சென்றிருக்கிறார். அங்கு இருந்த இளையதளபதியின் கட்அவுட் ஐ பார்த்த நிலையில், சிந்தனைகள் செயலிழந்த நிலையில் மூங்கில் தடிகளின் உதவியோடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விஜய்யின் "கட்அவுட்" ற்கு மேலேறி பாலாபிஷேகம் செய்ய முயன்றநிலையில் நிலைதடுமாறி கீழேவிழுந்து மரணமானார். இவை உங்களுக்கு தெரிந்தது தான்,தெரியாத விசயமே இங்குதான் ஆரம்பிக்கிறது.

மரணமான தன் ரசிகனுக்காக, அவரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்திற்காக இளையதளபதி என்ன செய்தார் என நீங்கள் ஜோசிக்கலாம்.கோவையில் நடைபெற்ற கத்தி வெற்றிவிழாவிற்கு வந்த விஜய்,உயிரிழந்த தன் ரசிகன் உன்னிகிருஸ்ணன் குடும்பத்தினரை நேரில்சந்தித்துள்ளார்.

அந்தநேரம் உன்னிகிருஸ்ணன்  குடும்பத்தினர் விஜய்யை கண்டதும் கதறி அழுதனராம். அந்தவேளையில் தான்  எல்லார்முன்னிலையிலும் துக்கம் தாங்காமல் விஜய்யும் கண்ணீர் விட்டு அழுதாராம். அத்தோடு அவர்களுக்கு  3 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தாராம் விஜய்.

 இவ்வாறு விஜய் கொடுத்த தொகை அவருடைய தனிப்பட்டபணம் இல்லையாம். விஜய்யின் கேரள ரசிகர்கள் தமக்கிடையே திரட்டிக்கொண்ட இந்தப் பணத்தொகையை ஒரு மரியாதை நிமித்தம் விஜய்யிடம் கொடுத்து, அவர் மூலமாக உன்னிகிருஸ்ணன் குடும்பத்திடம் சேர்த்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

                                           கோடம்பாக்கத்தில், நடிகர்களையும் அவர்களின் திரைப்படங்கள், அவர்கள் பற்றிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பிரபல மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஒருவரே (PRO) இந்த விஷயத்தை வெளியே கசியவிட்டிருப்பதாவும் அறியக்கிடைத்துள்ளது.

இப்போது சொல்லுங்கள் இளையதளபதி ரசிகர்களே...!!!
கண்ணீர் கவலையில் கசிந்ததா...?
இல்லை "கிளிசரின்" ஆல் கசிந்ததா....?



நன்றி சூரியன்


« PREV
NEXT »