Latest News

October 29, 2014

சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றமைக்கு ஐ.நா கடும் கண்டனம்!
by admin - 0


மனித உரிமைச் சபையின் சர்வதேச விசாரணைக்கு சாட்சியம் வழங்கும் நபர்கள் கைது செய்யப்படுகின்றமை விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கடும் கண்டம் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.


கிளிநொச்சி முழங்காவில் கிராஞ்சியை சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளரான சின்னத்தம்பி கிருஸ்ணன் என்பவர் இராணுவ புலனாய்வாளர்களால் கடந்த சனிக்கிழமை அன்று மாலை கைது செய்யப்பட்டு குறித்த நபரிடம்  புலனாய்வு துறையினரின் தேவையற்ற விசாரணைகள் மேற்கொண்டமை குறித்து வெளியுறவு அமைச்சர் பேரரிசிரியர் பீரிஸிடம் கடும் கண்டனம் வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் உறுதியளித்திருந்தது.

அந்த உறுதி மொழிக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரி ஒருவர் கூறியதாகவும் புலனாய்வு பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினார் என்றும் கொழும்புத் தகவல்கள் குறிப்பிட்டன.

அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக சாட்சியமளித்த சில குடும்ப பெண்களும் மற்றும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறித்தும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் ஐ.நா அதிகாரி வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் கூறியதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன
« PREV
NEXT »

No comments