Latest News

October 15, 2014

நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பிக்குகள்
by admin - 0

வவுனியா மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பில் ஒரு பிக்கு இனகாணப்பட்டார். அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில், மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான சுமனரத்ன முக்கிய பங்கினை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.படுவான்கரை பிராந்தியத்தில் உள்ள போரத்தீவு பற்று வெல்லாவெளி கிராமத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர் பலவந்தமாக ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த காணிகள் எல்லைப் புறங்களில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முறைப்பாட்டை போராத்தீவுபற்று பிரதேச செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் இந்த முறைப்பாட்டை அங்குள்ள காவற்துறையினர் ஏற்றுக் கொள்ள மறுத்துவருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments