இறுதியாக இம்மாத இதழ்களை விநியோகம் செய்யச் சென்றிருந்த விநியோகஸ்தர் ஒருவர் கடந்த காரம் கிளிநொச்சியின் உருத்திரபுரம் படைமுகாமிற்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டிரு
அத்துடன் அவர் விநியோகத்திற்கெ
ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல தடவைகள் தமது பத்திரிகைகளினை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களிற்கு சென்றிருந்த படையினர் அங்கு அப்பிரதிகளை விற்பனை செய்யவேண்டாமென அச்சுறுத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஏனைய புதினப்பத்திரிகைகளினை போன்றே இதனையும் விற்பனை செய்வதாக விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து அச்சுறுத்தியுமு
இதனால் தொடர்ந்தும் பத்திரிகையினை வெளிக்கொணர்வதென்பது கேள்விக்குறியாகியிருப்பதாக ஆசிரியபீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்த அரசியல் ஆய்வாளர் அ.யோதிலிங்கம் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் இது நம்தேசம் கனதியான அரசியல் களத்தை விமர்சிக்கும் இதழாக வெளிவருகின்றது.
இலங்கை அரசின் பயமுறுத்தல்களுக்கு அச்சு மற்றும் இணையங்கள் அச்சுறுத்தப்படுவது இன்றுவரை தொட்கதையாகிறது . நம் தேசம் மீதான அடக்குமுறையை விவசாயி இணையம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் அணைத்து ஊடகங்களும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்பதையும் வழியுறுத்துகிறது
No comments
Post a Comment