Latest News

October 29, 2014

பண்டாரவளையில் மண்சரிவு! 200ற்கும் மேட்பட்டோர் சிக்கியிருக்கலாமென அச்சம்
by admin - 0

பண்டாரவளை, ஹல்தும்முல்ல, மீரியாபெத்த பகுதியில் சில தோட்ட குடியிருப்புக்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்து நிலையம் தெரிவிக்கின்றது.


பண்டாரவளை, கொஸ்லாந்த மீரியாபெத்த பகுதி தொடர்ந்தும் மண்சரிவுக்குள்ளாகி வருகின்றது.

தற்போது 2 கிலோமீற்றர் பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளதுடன் 7 தோட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த 300ற்கும் அதிகமான மக்கள் மண்சரிவில் சிக்கியிருக்கலாமமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


கோயில் ஒன்றும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments