Latest News

October 30, 2014

அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்த வவுனியா இளைஞன் கைது
by admin - 0


அரசாங்கத்தை மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்த நபர் ஒருவரை மதவாச்சி பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பிரயாணம் செய்த நபர் ஒருவர் அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் கடுமையாக இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் அரசாங்கத்தை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளார். 
இந்த இளைஞர் ஆள் அடையாளத்தை உறுதி செய்யத் தவறியுள்ளார்.
கைது செய்யப்பட்டு நீண்ட நேரத்தின் பின்னர் தனது அடையாளத்தை உறுதி செய்துள்ளார். 
வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ரவிச்சந்திரன் சந்திரசேகரன் என்ற இளைஞரே இவ்வாறு அரசாங்கத்தையும் படையினரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
பஸ்ஸில் பயணித்த ஒருவர் இது குறித்து மதவச்சி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »