Latest News

October 19, 2014

சிறீலங்கா ஒரு பாதுகாப்பற்ற நாடு ! அவுஸ்ரேலியாவின் பயண எச்சரிக்கை அறிவிப்பு!
by admin - 0

தற்போதைய சூழ்நிலைகளில் சிறிலங்கா ஒரு பாதுகாப்பற்ற நாடு என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண எச்சரிககையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பான தமது பயண எச்சரிப்பை அவுஸ்திரேலியா புதுப்பித்திருக்கிறது. இதன்படி சிறிலங்காவில் நடக்கக்கூடிய அசம்பாவிதங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால் சிறிலங்கா செல்லும் அவுஸ்திரேலியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் சிறிலங்காவில் அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படும் குண்டர்கள், வெளிநாட்டு பயணிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
« PREV
NEXT »