Latest News

September 26, 2014

மாவீரன் லெப்.கேணல் திலீபன் தமிழர்க்கு என்று ஒரு தமிழ்த்தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம்.
by admin - 0

மூன்று அண்ணன்களோடும் கடைக்குட்டியாக பிறந்து. செல்லப்பிள்ளையாக வளர்ந்து, மருத்துவனாக மிக நல்ல வாழ்க்கை வாழ வேண்டிய வயதில் தன் சுயங்களை தூக்கி எறிந்துவிட்டு தன் இனத்தை காக்க போராட்டத்திற்கு வந்த வீரன். தன்னுயிரை கருவியாக வைத்து பன்னிரு நாட்கள் வாயில் ஒரு துளி நீரும் இன்றி எச்சிலையும் விழுங்க மறுத்து உலகின் அறத்திற்கே அறத்தை கற்று கொடுத்து விட்டு சென்ற அந்த வீரன் மண்ணுக்காக போராடி விடுதலைக்காக மண்ணின் விடுதலைக்காக செத்த அந்த மனிதன் அந்த மண்ணில் தனக்காக ஆறடி நிலத்துக்கு கூட ஆசைப்படவில்லை. எங்கோ பரிசோதனைக்கூடத்தில் மாணவர் ஆராய்ச்சிக்காக வைத்தால் போதுமென்று சொன்னவன் வித்துடல் விதைக்கப்பட்டதோ சிதைக்கப்பட்டதோ என்று தெரியாது. ஆனாலும் இன்றும் அவன் பசியுடன் காத்திருக்குறான் அந்த மாவீரன்.

மூன்று அண்ணன்களோடும் கடைக்குட்டியாக உலக அறப்புரட்சியின் மாவீரன் லெப்.கேணல் திலீபன் தமிழர்க்கு என்று ஒரு தமிழ்த்தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். மொழி,இனம் காக்கின்ற தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

« PREV
NEXT »