Latest News

September 18, 2014

குண்டுகள் விற்பணை செய்யும் ஸ்ரீலங்கா
by admin - 0

நேற்றைய தினம்(17) வல்வெட்டித்துறைக் கடல்கரையில், எறிகணைக் குண்டுகள் சில மீட்க்கப்பட்டுள்ளது . 81 மிமி ரக இந்த எறிகணைக் குண்டுகள் ஒன்றும், பழைய குண்டுகள் அல்ல. அவை கிறீஸ் பூசப்பட்ட நிலையில் பைகளின் சீராக அடைக்கப்பட்டு கடல் கரை ஓரத்தில் ஒதுங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனை முதலில் உள்ளூர்வாசி ஒருவரே கண்டுபிடித்ததாகவும், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் வந்து அதனை மீட்டதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இதேவேளை இக் குண்டுகள் புலிகளுடையாதாக இருக்கலாம் என்றும், இதனை இலங்கை கடற்படையினர் சோமாலியர்களுக்கு விற்பனை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடலில் இதுபோன்ற சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களின் இலங்கை இராணுவம் ஈடுபட்டவேளை, தவறுதலாக கடலில் விழுந்த இக் குண்டுகள் கரைக்கு அடித்துவரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுபோன்று பல குண்டுகள் காணப்படுகிறதா ? இல்லை சில குண்டுகளையே பொலிசார் மீட்டார்களா என்று இதுவரை அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
« PREV
NEXT »