சுதந்திர தமிழீழத்தில் தம்பி-பிரபாகரன் தேசியக் கொடியான புலிக்கொடியேற்றுவதைப் பார்ப்பதற்கே உயிரோடிருக்கின்றேன் என புலவர்-புலமைப்பித்தன் அவர்கள் கூறியுள்ளார்.
இருதயத்திற்கு செல்லும் வால்வுகளில் இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து; கொண்டேன்.
பிழைக்க முடியாது என்ற நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனாலும் அதிலிருந்து தப்பித்தேன். சுதந்திர தமிழீழத்தில் தம்பி-பிரபாகரன் தமிழர்களின் தேசியக் கொடியான புலிக்கொடியை ஏற்றுவதைப் பார்ப்பதற்காகவே எனது உயிர் காப்பாற்றப்பட்டதாக நினைக்கின்றேன்.
நிச்சயமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்வில் எனது குடும்பத்துடன் கலந்துகொள்வேன் என புலவர்-புலமைப்பித்தன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தலைவர்-தம்பி-நான் என்ற புத்தகத்தை தமிழக அரசியல் வாரஇதழ் நிறுவனர் திரிசக்தி சுந்தரராமன் வெளியிட மகிழ்ச்சி திரைப்பட தயாரிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டர்.
இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநரும் இன உணர்வாளருமான புகழேந்தி தங்கராச், மூத்த இயக்குநர் ஆர்.சி.சக்தி, கோவை.இராமகிருட்டினன், அய்யநாதன், இயக்குநர் கௌதமன், தயாரிப்பாளர் மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி, திருமுருகன், பாமரன், நடிகர் பார்த்தீபன், நடிகர் மயில்ச்சாமி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Social Buttons