Latest News

July 20, 2014

விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை
by Unknown - 0

மலேஷியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.
 
மலேஷியாவிலிருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்கள் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள இனங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்களெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
« PREV
NEXT »