Latest News

July 28, 2014

வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: பிரித்தானியா
by Unknown - 0

நம்பிக்கை தொடர்பான வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒரு மாத நோன்புக்கு பின்னர் இந்த பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இது தொழுகை, தொண்டு உட்பட இஸ்லாத்தின் உண்மையான ஆவியை பிரதிபலிக்கின்றது.
இந்த கொண்டாட்ட நேரத்தில் இலங்கை மக்கள் நம்பிக்கையை மதித்து வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய முடியும் என நம்புகிறேன்.
இலங்கையர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் சமாதானமான பெருநாளாக இந்த நோன்பு பெருநாள் அமைய வாழ்த்துவதாக பிரித்தானிய தூதுவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
« PREV
NEXT »