யாழ் மாவட்டத்தின் உரும்பிராய் சிறந்த விவசாயி விருது பெற்ற விவசாயி ஒருவரின் ஆதங்கம்
விவசாய நிறுவனங்களும் , அரச சார்பற்ற நிறுவனங்களும் தங்களது சுய லாபம் கருதியே இயங்குகின்றன.. விவசாய மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி அவர்கள் அலட்டி கொள்வதில்லை.. உதவி செய்வதாக கூறி தங்களை பெயர் படியலில் சேர்ப்பதும் பின்னர் அது பற்றி எந்த நடவடிக்கையுமோ தகவல்களுமோ எடுப்பதுவோ தருவதுவோ இல்லை சகட்டு மேனிக்கு செயற்படுகிறார்கள் .. இது பொதுவாக உள்ள பிரச்சனையாக இருக்கின்றது... இது இப்படி இருக்க அன்றாடம் கடன் நிவர்த்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை என்ன.. கடன் கொடுக்க வேகமாக வரும் நிறுவனங்கள் அதே வேகத்தில் கடனை திரும்ப கேட்டால் வருமானம் இல்லாத போது எவ்வாறு இது சாத்தியப்படும் .... எதனை பரிசுகள் பெற்றாலும் வருமானம் உள்ள போதே மனம் நிறைவடைகின்றது....இது ஒரு விவசாயின் ஆதங்கம்.
Social Buttons