Latest News

December 08, 2013

அர­சியல் பேதங்­க­ளின்றி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவ முன்­வர வேண்டும்
by admin - 0

“அபி­வி­ருத்தி அபி­வி­ருத்தி என்று கூச்­ச­லிட்டுக் கொண்­டி­ருப்­ப­வர்கள் வன்னிப் பக்கம் வந்து எமது மக்கள் படும் அவஸ்­தை­களைப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக் கஞ்­சிக்கே வழி­யில்­லாது குடும்­பங்கள் மண்ணில் பரி­த­வித்துக் கொண்­டி­ருக்­கும்­போது, இந்த சபையில் பேசா மடந்­தை­க­ளாக எம்மால் இருக்க முடி­யாது. எனவே எமது கருத்­துக்­க­ளுக்கு செவி­ம­டுங்கள். எமது உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளி­யுங்கள். எமக்குப் புலி முத்­திரை குத்த எண்­ணா­தீர்கள். எமது நியா­யங்­க­ளுக்கு எதிர்­வாதம் புரி­யா­தீர்கள்” என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்­க­ல­நாதன் வியா­ழ­னன்று சபையில் உருக்­க­மான வேண்­டுகோள் ஒன்றை விடுத்தார்.
புலி­களைப் பாவிக்­காது உங்­களால் மக்­க­ளி­டத்தில் சென்று வாக்குக் கேட்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பிய செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி., இரா­ணு­வத்­திற்கு அதி­க­மான நிதி­யினை ஒதுக்­கீடு செய்­வதன் மூலம் மீண்­டு­மொரு யுத்­தத்தை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றீர்­களா? என்றும் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
வட மாகா­ணத்தைப் பொறுத்­த­மட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்து சுமார் 5 ஆண்­டுகள் ஆகி­விட்ட நிலை­யிலும் மக்கள் எதிர்­நோக்கும் நெருக்­க­டிகள், அடிப்­படைப் பிரச்­சி­னைகள் எந்த வகை­யிலும் தீர்ந்­த­பா­டற்ற நிலை­மை­களே தொடர்ந்து வரு­கின்­றன. மாண­வர்கள் கற்றல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவோ, இளை­ஞர்கள் உரிய தொழில் வாய்ப்பைப் பெற்­றுக்­கொள்­ளவோ முடி­யா­த­வர்­க­ளாக இருந்து வரும் நிலையில் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் எந்­த­வித முன்­னேற்­ற­மு­மின்றிக் காணப்­ப­டு­கின்­றனர்.
இதனை நன்கு உணர்ந்த வகை­யி­லேயே நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சபையில் தனது ஆதங்­கத்தை வெளி­யிட்­டுள்ளார். அர­சியல் ரீதி­யாக வேறு­பா­டுகள் இருந்­தாலும் கூட பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை அணு­கு­வதில் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் ஒரு­மித்த கருத்து இருப்­பது மிகவும் அவ­சி­ய­மாகும். பொது­வா­கவே நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளேயும் சரி, வெளி­யேயும் சரி தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஏதா­வது குரல் எழுப்பும் சந்­த­ர்ப்­பங்­களில் அவர்­க­ளுக்கு எதி­ராகப் புலி முத்­திரை குத்­தப்­ப­டு­வது சர்வ சாதா­ர­ண­மாகத் தொடர்ந்து வரு­கி­றது. இது இன்று நேற்­றன்றி கடந்த பல தசாப்த கால­மாக நிலவி வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதன் கார­ண­மாகத் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் பேசப்­ப­டாத ஒன்­றா­கவும், தீர்க்­கப்­ப­டாத ஒன்­றா­கவும் மாறி­வி­டு­வ­தையும் காண முடி­கின்­றது.
யுத்தம் முடிந்த பின்­னரும் ஒரு­சில அர­சி­யல்­வா­திகள் புலி­களின் பேரி­லேயே தங்­களின் அர­சி­யலை முன்­னெ­டுத்து வரு­வ­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­வ­துடன், இந்த நிலைமை மாற வேண்டும் எனவும் தமிழ் மக்கள் கோரு­கின்­றனர். வெறு­மனே சந்­தே­கத்தின் பேரில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பார்க்­கப்­பட்­ட­துடன், பல்­வேறு இன்­னல்­க­ளுக்கும் அவர்கள் ஆளா­னார்கள். ஆனால், அந்த நிலைமை மீண்டும் தொடர எவரும் இட­ம­ளிக்கக் கூடாது.
சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் சீர்­தூக்கிப் பார்த்து அவர்­க­ளையும் இணைத்துக் கொண்டு செல்­வதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த அபி­வி­ருத்­தியை அடையக் கூடி­ய­தாக இருக்கும். எனினும் அதனை நன்கு உண­ராத வகையில் ஒரு­சில அர­சி­யல்­வா­தி­களும் கடும் போக்­கா­ளர்­களும் மற்றும் ஒரு­சில இன­வாத அமைப்­புக்­களும் சிறு­பான்மை மக்­களை அடி­மை­களைப் போல் நடத்த முற்­ப­டு­வ­தாகத் தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர்.
இவை அனைத்­துக்கும் மேலாக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராகக் குரல் எழுப்­பு­வதன் மூலமும் அவர்­களின் உரி­மை­களை நசுக்­கு­வதன் மூலமும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில் தங்­களை வீரர்­க­ளாகக் காட்டிக் கொள்ள முடியும் என ஒரு­சில பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் கரு­து­கின்­றனர். இதனால் நாட்டில் இன­வா­தமே மேலோங்­கு­வ­துடன் இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே முன்­னிலை பெறு­கின்­றன.
அர­சி­யல்­வா­தி­களே மக்­களைப் பிரித்­தா ளும் தந்­தி­ரோ­பா­யங்­களைக் கடைப்­பி­டித்து வரு­வ­துடன், அதன் விளை­வாக தங்கள் அர­சியல் இருப்­புக்­க­ளையும் தக்க வைத்துக் கொள்­கின்­றனர். இதனால் இனங்­க­ளுக்­கி­ டையே, சமூ­கங்­க­ளுக்­கி­டையே பிரி­வி­னை­களும் புரிந்­து­ணர்­வற்ற தன்­மை­களும் மேலோ ங்­கு­கின்­றன. இந்த நாடு சுமார் மூன்று தசா ப்த காலம் மிக இருண்ட யுகத்தை சந்­தித்­த­மைக்குக் கூட இந்த இன­வாத ரீதி­யான போக்­ கு­களே அடிப்­படைக் கார­ண­மாக இருந்­தன என்ற யதார்த்­தத்­தையும் மறந்­து­விடக் கூடாது.
கடந்த கால அனு­ப­வங்­களில் இருந்து அர­சி­யல்­வா­திகள் கற்றுக் கொள்ளத் தவ­று­வார்­க­ளே­யானால் அது மிகவும் வருந்­தத்­த­தக்க ஒன்­றா­கவே இருப்­ப­துடன், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்­த­வொரு விமோ­ச­னத்­தையும் அளிக்­காத ஒன்­றா­கவே போய்­விடும் என்­ப­தை யும் மனதில் கொள்ள வேண்டும்.
வட பகு­தியில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களை மீட்க வேண்­டிய பாரிய பொறுப்பு அனைத்துத் தரப்­பி­ன­ரையும் சார்ந்த­தாகும். வெறு­மனே அர­சியல் பேதங்கள் கார­ண­மாக அந்த மக்­களைப் புறந்­தள்ள எவரும் முனையக் கூடாது. அது ஒரு­போதும் தார்­மீக செய­லா­கவும் அமைய மாட்­டாது.
குறைந்­த­பட்சம் பாதிக்­கப்­பட்ட வட பகுதி மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்­கைக்குத் திரும்பும் வகையில் ஏற்ற ஒழுங்­கு­களைச் செய்ய நட­வ­டிக்கை எடுப்­பது இன்­றி­ய­மை­யா­த­தாகும். அந்­த­வ­கையில் இடம்­பெ­யர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்­களில் மீளக் குடி­ய­ம­ரவும், தங்கள் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்திக் கொள்­ளவும், பொரு­ளா­தார ரீதி­யாக தங்­களை அபி­வி­ருத்தி செய்து கொள்­ளவும் ஏற்ற சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும்.
அத­னை­வி­டுத்து அவர்கள் மீது அநா­வ­சிய அழுத்­தங்கள் அதி­க­ரிக்­கு­மா­னாலோ அன்றேல் தொடர்ந்தும் அக­தி­களைப் போல் வாழும் நிலை நீடித்­தாலோ அவர்­களின் வாழ்க்­கையில் எந்­த­வி­த­மான மாற்­றத்­தையும் காண­மு­டி­யாத நிலை­மையே மிஞ்­சு­வ­தாக இருக்கும்.
இத­னி­டையே யுத்தம் முடிந்த கையோடு மீண்டும் தங்கள் சொந்த இடங்­க­ளுக்குத் திரும்பி நிம்­ம­தி­யாக வாழலாம் என்று எதிர்­பார்த்த மக்கள் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றங்­க­ளையே சந்­தித்து வரு­கின்­றனர். அதி­பா­து­காப்பு வலயம் என்ற பெயரில் அவர்­களின் வாழ்­வி­டங்கள் கடந்த மூன்று தசாப்த கால­மாக கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், தற்­பொ­ழுது அங்­குள்ள ஆல­யங்கள், வீடுகள், பாட­சா­லைகள் என்­பன அழிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தக­வல்கள் வெளி­வந்­த­வண்­ண­முள்­ளன. இந்த வித­மான சூழல் தமிழ் மக்கள் மனதில் மிகுந்த வேத­னையை உரு­வாக்­கு­வ­தா­கவே அமையும் என்­ப­தையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தமது அர­சியல் உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுத்த தமிழ் மக்கள், இன்று தமது அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டும் பெற முடியாதவர்களாக மாறியுள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களும் வகை தொகையின்றி அதிகரித்துச் செல்வதையே காணமுடிகின்றது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க அனைத்து சக்திகளும் மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களின் உள்ளங்களை வெல்லக் கூடியதாக இருப்பதுடன், நாட்டின் உண்மையான புரிந்து ணர்வையும் சகோதர உணர்வையும் கட்டியெழுப்பக் கூடியதாக இருக் கும். அன்றேல் தமிழ் மக்களின் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
« PREV
NEXT »

No comments