Latest News

March 07, 2012

வித்யா பாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த 'சில்க்'!
by admin - 0


கடந்த இரு ஆண்டுகளாக பெரிதும் எதிர்ப்பார்த்து ஏமாந்த வித்யா பாலனுக்கு இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துவிட்டது.

ஏற்கெனவே 2009-ஆண்டு பா படத்துக்காகவும், 2010 இஷ்கியா படத்துக்காகவும் அவர் சிறந்த நடிகை விருது பெறுவார் என யூகங்கள் வெளியாகின. ஆனால் கிடைக்கவில்லை.

இந்த முறை அவர் மறைந்த சில்க் ஸ்மிதா 'உதவி'யுடன் இந்த விருதைப் பெற்றுள்ளார். காரணம் தி டர்ட்டி பிக்சர் சில்க்கின் சொந்த வாழ்க்கைக் கதை. இந்தப் வெளியானபோதே வித்யாவுக்கு தேசிய விருது கண்டிப்பாக உண்டு என கூறப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்டபோது வித்யா இந்தியாவில் இல்லை. துபாயில் இருந்தார். சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2009-ம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, மதியம் 2 மணியிலிருந்து போனை ப்ரீயாக வைத்துக் கொள். நல்ல சேதி வரும் என்று தகவல் வந்தது. நானும் அப்படியே வைத்திருந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த 2010-ம் ஆண்டும் அதே மாதிரி சொன்னார்கள். இஷ்கியா படத்துக்காக சிறந்த நடிகை விருது கிடைக்கும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.

இந்த ஆண்டு நான் இந்தியாவில் இல்லை. கஹானி படத்தின் புரமோஷனுக்காக துபாய் வந்துள்ள நேரத்தில் விருது அறிவிப்பு வந்துள்ளது," என்றார்.

"விருதுகள் ஒரு கலைஞனுக்கு மிக முக்கியமானவை. அந்த விருதுகள் அர்த்தமுள்ளதாக அமையும்போதுதான் மகிழ்ச்சி பிறக்கிறது," என்கிறார் வித்யா.

இப்போ ஹேப்பிதானே!
« PREV
NEXT »

No comments