கமல்ஹாசன் இப்போது, 'விஸ்வரூபம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தை தாயரித்து இயக்குகிறார்.
இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக ஆன்ட்ரியா, பூஜா குமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடந்து முடிந்தது. 40 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட படப்பிடிப்பு, ஜோர்டான் நாட்டில் நடக்கிறது.
அங்கு ஷூட்டிங் நடத்தப்படும் முதல் படம் என்ற பெருமை கமல்ஹாசனின் விஸ்வரூபம்தான் என்று கூறப்படும். அடுத்த 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.
50 பேர்களுடன்...
கமல்ஹாசனுடன், படப்பிடிப்பு குழுவினர் 50 பேர் ஜோர்டான் நாட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
சில முக்கிய காட்சிகளும், 2 பாடல் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட உள்ளன. அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் கமல்ஹாசனும், 'விஸ்வரூபம்' படக்குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள்.
ஆரம்பத்தில் இந்தப் படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் படமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினருக்கு கனடா விசா மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
No comments
Post a Comment