வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » » ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி புகுஷிமா கடற்கரை பகுதியில் நிலநடுக்கமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானார்கள்.
மேலும் அங்குள்ள அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு வெளியானது. கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். தற்போது அங்கு நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதித்த புகுஷிமாவின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


அதிகாலை 3.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புகுஷிமா கடலில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் அது உருவானதாகவும் அறிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை அபாயம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும் புகுஷிமா அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 240 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

Join Us On Facebook

Please Wait 10 Seconds...!!!Skip

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi